tag:blogger.com,1999:blog-6271109045478902761.post4736446773879992195..comments2023-10-21T21:45:59.813+05:30Comments on ___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___: தயவு செய்து உங்கள் அழுகையை நிறுத்துங்கள்.ஓஹோ புரொடக்சன்ஸ்http://www.blogger.com/profile/12178766077574180118noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6271109045478902761.post-77785650135013122002012-04-17T01:11:54.326+05:302012-04-17T01:11:54.326+05:30நான் பாஸ்கர்சக்தி(முதலில் ஒரு தகவல். நான் உங்கள் ர...நான் பாஸ்கர்சக்தி(முதலில் ஒரு தகவல். நான் உங்கள் ரசிகன் முத்து. உங்கள் மீது எனக்கு கோபமா? மிக மிக தவறான தகவல்)<br />நேற்றைய நிகழ்வு என்னையும் கலங்க வைத்தது முத்து. எனக்கும் கிருஷ்ணாவுக்கும் பொதுவான நண்பர்கள் நிறையப் பேர் இருந்தும் அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்படாமல் போனது வியப்பாகவே இருக்கிறது. இந்த மனிதனுடன் பழகாது போய்விட்டோமே என்கிற வருத்தம் நேற்று எனக்கு ஏற்பட்டது. அவரைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத நான் நேற்று மிக முக்கியமான வேலை ஒன்றை விட்டு விட்டு கூட்டத்துக்கு வந்ததற்கு நீங்களும், செந்தமிழனும், கார்ட்டூனிஸ்ட் பாலாவும் எழுதிய பதிவுகளே காரணம். இத்தனை பேராலும் நேசிக்கப் பட்ட ஒரு மனிதனை இந்த சந்தர்ப்பத்திலாவது அறிந்துகொள்ள வேண்டும் என்று கிளம்பி வந்தேன். அங்கே வந்திருந்த அத்தனை பேரும் கிருஷ்ணா மீது கொண்டிருந்த அன்பை உணர முடிந்தது... எல்லோரும் இதயத்திலிருந்து பேசினார்கள். கிருஷ்ணா ஆச்சி, மதன் , செந்தமிழன், ஷாஜி, மனுஷ்யபுத்திரன் ஆகியோர் பேசியது மனதைத் தொட்டது...நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கிருஷ்ணாவின் சகோதரியும் தந்தையும் பேசும் போது மிகுந்த மன வேதனைக்கு ஆட்பட்டேன். எதற்காக இந்த நிகழ்ச்சி என்று கூடத் தோன்றியது. அதன் பின் ராம், `கிருஷ்ணாவின் மகள் நேயா நாளை வளர்ந்து வந்து இதனைப் பார்க்கையில் தன் தந்தை எப்படியானவர் என்பதை புரிந்து கொள்வதற்காகவே இந்த நிகழ்வு’ என்று விளக்கியபோது மனம் சமாதானமடைந்தது...இந் நிகழ்ச்சி மிக முக்கியமானது. ஒரு சக மனிதனை, கலைஞனை நேசித்த எல்லாரும் கூடி அவனை நினைவு கூர்ந்த இந்த நிகழ்ச்சி கிருஷ்ணாவின் வாழ்க்கைக்கும் குணத்துக்கும் கிடைத்த அங்கீகாரம். இந் நிகழ்வின் பின்னணியாக இருந்து உழைத்த ராமும் மற்ற நண்பர்களும் பாராட்டுக்குரியவர்கள்.<br />திரையில் லூசுப் பொண்ணே பாடலை கிடார் மீட்டி கிருஷ்ணா பாட அவரது மகள் நேயா சிரித்தபடி ஆடும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. எதிரே ஜெயராணியின் மடியில் அமர்ந்திருந்த நேயாவுக்கு அந்தக் காட்சியைப் பார்த்த்தும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அதை அம்மாவிடம் காட்டி காட்டி அவள் சிரிக்கிறாள். அதைப் பார்க்கையில் என் மனதில் ஏற்பட்ட உணர்வை எந்த வார்த்தையாலும் விளக்கி விட முடியாது.மேற்கு தொடர்ச்சி மலைhttps://www.blogger.com/profile/02345907172778736305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-65465158063890314252012-04-16T20:27:22.455+05:302012-04-16T20:27:22.455+05:30குமுதம் ஆச்சி சொன்ன கதை சரி தான். ஆனால் எப்போதுமே ...குமுதம் ஆச்சி சொன்ன கதை சரி தான். ஆனால் எப்போதுமே நம் வருத்தம் இறந்தவர் குறித்தல்ல. இறப்பவர் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை அடைகிறார். நம் வருத்தம் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீதே. குறிப்பாய் சம்பாதிக்கும் ஒரு நபர் இறந்து ஒரு குடும்பம் படும் வேதனை கொடியது <br /><br />கிருஷ்ணாவை மட்டுமல்ல மனிதர்கள் யாரையுமே உயிரோடு இருக்கும் போது அவருக்குண்டான மதிப்பை, சரியான மரியாதையை தர தவறி விடுகிறோம். ஒருவரை எந்த அளவு நேசிக்கிறோம் , அவர் மீது எந்த அளவு மதிப்பு வைத்துள்ளோம் என்பதை அவர் இறந்த பிறகு சொல்லி சொல்லி ஆத்து போகிறோமே அன்றி அவர் இருக்கும் போதே சொன்னால் அந்த மனிதர் எவ்வளவு மகிழ்வார் !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6271109045478902761.post-16662622178559911912012-04-16T19:47:56.500+05:302012-04-16T19:47:56.500+05:30ஜூராசிக் பார்க் வெளிவந்திருந்த சமயத்தில் ராணிமுத்த...ஜூராசிக் பார்க் வெளிவந்திருந்த சமயத்தில் ராணிமுத்துவில் வெளியான ஒரு நாவல். Drift Theoryயை அடிப்படையாக கொண்டு டைனோசர்கள், ராட்சத பறவைகள் வாழும் தீவு, அந்த தீவில் வசிக்கும் ஒரு இளைஞிக்கும், ஒரு ஆராய்சியாளனுக்கும் இடையே உண்டான ஒரு காதல் என்று அப்படியே இன்றைய அவதார் கதையை எழுதியிருந்தார் கிருஷ்ணா! டா வின்சியின் vision பற்றித் தெரிந்து கொண்டுதான் பெயரில் சேர்த்துக் கொண்டார் போல!<br /><br />படைப்பாளிகள் படைப்புகள் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்!Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.com