Wednesday, January 21, 2015

ப்ளீஸ் நோட் திஸ் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி

யாரை, என்னத்தை, எப்போ,எங்கே எப்படி, எதுக்கு எரிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளமுடியாத, வானத்துக்கு கீழே உள்ள அத்தனை கெட்ட கிரகங்களும் கூடியிருந்து கொட்டமடிக்கும் இடம் என்பதால் பெரும்பாலும் நான் புத்தக கண்காட்சிகள் பக்கம் போவதே இல்லை.

இன்னொரு காரணம் இல்லக்கியவாதிகள் கூடியிருக்கும் இடத்தில் நமக்கு கண்டிப்பாக வேலையில்லை. கல்லூரி நாட்களிலேயே தகுதிக்கு மீறி தாடிவளர்த்து, ஜோல்னா பையில் ஆத்மா நாம், ஆதவன், லா.ச.ரா, அசோகமித்திரன்,ஜி.நாகராஜன் மற்றும் ‘அன்னம் விடு தூதுகளுடன் டயர்டாகுற அளவுக்கு அலைஞ்சாச்சி.

இப்படி போவதில்லை என்று எழுத ஆரம்பிப்பதே போனதைப் பற்றி என்னத்தையோ எழுதத்தான் என்பது என்னத்தே கன்னையா உட்பட எல்லோருக்கும் தெரியும்.
இனியும் கொண்டுகொலையெடுக்காமல் மேட்டருக்கு வருகிறேன்...

கடந்த சனியன்று மாலை சுமார் ஏழு மணியளவில் புத்தகக்கண்காட்சிக்கு போயிருந்தேன்.

ஒரே நோக்கம் முகநூல் மூலம் பரிச்சயமான எழுத்தாளர் வா.மணிகண்டனை சந்திப்பது. அவரை முகநூலில் பார்க்கும்போதெல்லாம் ‘முந்தானை முடிச்சு’ பாக்கியராஜ் ஏன் என் நினைவுக்கு வருகிறார் என்று சொல்லத்தெரியவில்லை. ஒருவேளை இதற்கு தக்க பதில் மணிகண்டனிடம் இருக்கலாம்.

அவருடைய முகநூல் ஸ்டேட்டஸ்களையும், ‘நிசப்தம்’ ப்ளாக்கையும் ரெகுலராக வாசிப்பதுண்டு. அவரது அறக்கட்டளை குறித்தும் ஓரளவு அறிந்ததுண்டு.

நேரில் சந்தித்தது அதுதான் முதல்முறை. அவர் சொன்ன ஸ்டால் நம்பரை நோக்கி நடந்தபோது முதலில் என் பார்வையில் பட்டவர் இலக்கிய உலகின் வெடிகுண்டு முருகேஷன் என்று அழைக்கப்படும் வேடியப்பன். அவருக்குப் பக்கத்தில் வேஷ்டி சகிதமாக வெண் புன்னகையுடன் வரவேற்றார் மணிகண்டன்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப்பின் அவரது சிறுகதைத்தொகுப்பான ‘லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’ மற்றும் கட்டுரைத்தொகுப்பான ‘மசால்தோசை 38 ரூபாய்’ ஆகிய புத்தகங்களைத் தந்தார்.
காசு கொடுத்தபோது வாங்க மறுத்தார். ரொம்ப வற்புறுத்தி கொடுக்க நான் முனையவில்லை.காரணம் அன்று பர்ஸில் ஒரு குவார்ட்டர் மற்றும் சிகரட் பாக்கெட் வாங்கும் அளவுக்கே காசு இருந்தது. இன்னொரு காரணம் மணிகண்டன் சாஃப்ட்வேர் துறையில் சம்பாதித்துக்கொண்டே பார்ட் டைமாக எழுதுபவர். சாஃப்ட்வேர் எழுத்தாளர்கள் பற்றி ஹார்ட்வேர் அபிப்ராயம் கொண்டவன் நான்.[ ப்ளீஸ் நோட் இட் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி.]

அன்று இரவு சன் டி.வி விவாத மேடைக்கு ’வா’ என்று மணிகண்டனுக்கு திடீர் அழைப்பு வந்ததால் ‘இரவு வெளிய போகலாம்’ என்று அவர் சொல்லியிருந்த ’ரகசியத்திட்டம்’ தள்ளிப்போடப்பட்டு, ஸ்டாலை விட்டு விரைந்தே வெளியே வந்தேன்.

தோழர் ரேவதி தவிர அன்று இலக்கியவாதிகள் யார் கண்ணிலும் படாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணிய போது ‘ஆண்டவன் இருக்காண்டா கொமாரு’ என்று  சொல்லிக்கொண்டேன்.

மணிகண்டனை சந்திக்கச்சென்றதும், அவரது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததும் ஒரு ‘காரணமாகத்தான்’.

மறுநாள் ஞாயிறன்று முழுமூச்சாக இரண்டு புத்தகங்களையும் வாசித்துமுடித்தவுடன் மணிகண்டனுக்கு நான் அனுப்பிய மெயில் இது...

அன்புள்ள மணிகண்டன்
நேற்று ‘மசால் தோசையும் இன்று ‘மாரியப்பனையும் வாசித்து முடித்தேன். மொத்த எழுத்துக்களையும் மனசுக்கு நெருக்கமாக உணரமுடிந்தது. இரண்டின் எல்லா எழுத்துக்களிலுமே நீங்கள் இருந்துகொண்டே இருப்பதால் உங்கள் ‘பயஃகிராபி’ படித்தது போல ஒரு உணர்வு. குறிப்பாக மசால்தோசை பதிவுகளை சிறுகதைகள் போலவே சொல்லியிருப்பது ஆச்சர்யமூட்டியது. எதையும் நீட்டி முழக்காமல் கொஞ்சமே கொஞ்சமாக எழுத வாய்த்திருப்பது வரம். சுஜாதா உங்களுக்குள் ஸ்ட்ராங்காக குடியிருக்கிறார்.

சமீப வருடங்களில் நான் வாசிக்கும் பழக்கத்தை ஏறத்தாழ துறந்திருந்தேன். ‘மானசரோவர்’ பாட்டிசைக்கும் பையன்கள்’ குட்டி இளவரசன்’ அந்நியன்’ ஜமீலா’ போன்ற சிலவற்றை அடிக்கடி படிப்பேன். மற்றபடி புது எழுத்துக்கள் அவ்வளவாக வாசிக்க முடியவில்லை அல்லது மனநிலை இடம் தரவில்லை என்றும் சொல்லலாம்.
உங்கள் இந்த புத்தகங்கள் ’காரணமாக’ வாசிக்க ஆரம்பித்தது. உங்கள் ப்ளாக் ரெகுலராக படித்திருந்தும் இவற்றை எப்படி மிஸ் பண்ணினேன். இப்படி எத்தனை சமீபத்திய நல்ல புத்தகங்களை படிக்காமல் விட்டிருக்கிறேன் என்றொரு மெல்லிய குற்ற உணர்வுக்கு ஆளானது உண்மை.
சரி, நம்ம கதைக்கு வருகிறேன். 

அது என்ன நம்ம கதை? புதுக்கதையால்ல இருக்கு?? என்கிற கேள்வி ஒன்று உங்களுக்கு இங்கே எழுந்தே ஆகவேண்டும்.

அதை நான் சொல்லமுடியாது. மணிகண்டன் சொல்லுவாரா என்று தெரியாது...

Friday, January 2, 2015

’குஷ்புவின் மனதை கொள்ளை அடித்தேனா?’

Anthanan Shanmugam குஷ்பு முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன் முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோடானு கோடி தொண்டர்கள் சார்பில் பாராட்டுகள். இனி எந்நேரமும் இதே கலர் துண்டுடன் அவர் நடமாட தீர்மானித்திருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை உண்டா என்பதை Elumalai Venaktesan அவர்கள் முத்துராமலிங்கனிடம் கேட்டு சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம்...




 Elumalai Venaktesan Anthanan Shanmugam குஷ்பு இளம்பெண்ணாக சென்னை வந்தபோது, Muthu Ramalingam ஒரு புகைப்பட கலைஞனாக குஷ்புவின் மனதை கொள்ளையடித்த கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது.. மைக்கேல்,மதன, காம, ராஜ் என நாலா பக்கமும் சம்பவங்கள் உள்ளதே, இதில் எதை எடுப்பேன்..Vetri Vel...  

Vetri Vel முத்து அண்ணன் விருது வாங்கம் போது, வேறு எங்கோ பார்வையை திருப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

Muthu Ramalingam Elumalai Venaktesan குஷ்பூ இளம்பெண்ணாக சென்னை வந்த போது ஐ யாம் ஸ்டடியிங் இன் ஒண்ணாங்கிளாஸ்.....ஹெஹே.. 

Elumalai Venaktesan தனிப்பதிவு தயாராகிட்டிருக்கு சார்.. ஏன் பொறக்கவே இல்லைன்னு சொல்லலாமே சார்... 

Elumalai Venaktesan Muthu Ramalingam நீங்க என்ன தில்லாலங்கடி வேலை காட்டினாலும் ஒரு காவியத்தை அரங்கேற்றாமல் விடப்போவதில்லை..
    •   
     
 ’புள்ள அடுத்த படத்தை இன்னும் கொஞ்சம் ‘வெவரமா’ எடுக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், மக்கள் தொடர்பாளர்கள் டயமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் ஆகியோர் வருடா வருடம் நடத்தும் 'V4' விழாவில் அடியேனுக்கு ‘சிநேகாவின் காதலர்கள்’க்காக 2014-ன் சிறந்த புதுமுக இயக்குநர்  விருது கொடுத்து கவுரவித்தார்கள்.

தற்செயலாக எனக்கு விருது வழங்குபவராக தங்கத்தலைவி குஷ்பூ அமைந்துவிட, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் சற்று முன்னர் துவங்கியிருக்கும் கச்சேரியின் துவக்க பீடிகைகள் தான் மேலே இருப்பவை.

மேற்படி நண்பர்கள்லாம் குஷ்புவின் காதலர்கள்ங்குறதை தாங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கிறாங்க.

நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன்னு நம்ம சமூகத்துக்கு நல்லாவே தெரியும்...கமான் ...ஸ்டார்... ம்யூசிக்...

’மூவி ஃபண்டிங் நிகழ்ச்சியில கரு. பழனியப்பன் பேசுன வீடியோ தேடிப்பாத்தேன். கிடைக்கல’ என்று சில நண்பர்கள் போனில் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்..

அதன் யூடுப் லிங்க் இதோ;