Saturday, November 26, 2011

.மயக்கம் என்ன’- விமரிசனம்.

யூத்துகளை மனதில் கொண்டு செல்வராகவன் அடிக்க வந்திருக்கும் புதிய கூத்து இந்த மயக்கம் என்ன’
 சரி முதலில் கதையப்பார்ப்போம்.கார்த்திக் சுப்ரமணியமும்(தனுஷ்) அவரது பொறுப்பற்ற நண்பர்களும் ஒன்றாக வசிக்கிறார்கள். சமீபத்திய மற்ற படங்களைப்போல சகட்டுமேனிக்கு குடிக்கிறார்கள்.இந்த நண்பர்கள் பட்டியலில் செல்வராகவனின் ஸ்டேட்மெண்ட்படி ரெண்டு மொக்கை ஃபிகர்களும் அடக்கம். இந்த வீணாப்போன கூட்டணியில் கார்த்த்திக்கின் நண்பரின் காதலியாக வந்து சேருகிறார் யாமினி(ரிச்சா கங்கோபாத்தியாய).தனுஷின் நண்பருக்கு டேட்டிங்’ கொடுத்துவிட்டு இன்னொரு பக்கம் தனுஷுடன் கள்ளகாதலில் ஈடுபடுகிறார் ஆயா.இது ஒரு ரூட்டுலதான் போய்க்கொண்டிருக்கும்போது,கார்த்திக் ஆகப்பட்ட தனுஷ் கேமராவைத்தூக்கிக்கொண்டு பெரிய போட்டோகிராபர் ஆக ஆசைப்படுகிறார்.போனாப்போகட்டும் ‘அண்ணன் ஆசைப்படுறார்  அதனால தம்பி செய்றார் என்று புரிந்துகொண்டு  தனுஷை நல்ல போட்டோகிராபர் யாராவது ஒத்துக்கொண்டிருந்தால் கதை நல்ல படியாக முடிந்து சுபம் போட்டிருப்பார்கள். அனால் தனுஷை நல்ல போட்டோகிராபர் என்று ஏற்றுக்கொள்ளாமல் ஆளாளுக்கு இன்சல்ட் பண்ணுகிறார்கள்.அவர் எடுக்கிற போட்டோக்களை ‘ஆய்’ போட்டோ என்கிறார்கள்.என்னடா பய தரை ரேஞ்சுக்குப்போய் ஆய் கீய்ன்னுல்லாம் எழுதுறானேன்னு யோசிக்காதீங்க,அது அண்ணன் செல்வா, படத்துல பலமுறை ரசிச்சி யூஸ் பண்ணின் வார்த்தை.
 இந்த நேரத்தில கள்ளக்காதலி ஒரிஜினலா மாறி தனுஷை கல்யாணம் பண்ணிக்கிறாங்க. இந்த விபத்துக்கு அப்புறம் ஒரிஜினலாவே ஒரு விபத்து. அந்த விபத்து எப்பிடி ஒரு மனுஷனை கன்னாபின்னான்னு சின்னாபின்னமாக்குது அப்பிடிங்கிறதுதான் ‘மயக்கம் என்ன’ படத்தோட கதை.இதப்படிக்கிறப்பவே மயக்கம் வருதுன்னு சொல்றவங்களுக்கு பாத்த எங்களை நினைச்சிக்கிறதுதான் ஒரே ஆறுதல்

. தனுஷ சும்மா சொல்லக்கூடாது,வரவர நடிப்புல வெளுத்து
வாங்குறார்.கங்கோபாத்தியாயா தமிழுக்கு ஒரு புஷ்டியான வரவு.இதை அர்த்தபுஷ்டியுடன்’ படித்தால் நான் பொறுப்பல்ல.போட்டோகிராபி சம்பந்தமான படம்ங்கிறதால லைட்டிங்கில் சிலபல எக்ஸ்பரிமெண்ட்களில் ஈடுபட்டிருக்கிறார் ஒளீப்பதிவாளர் ராம்ஜி. கேமராமேன்’ஜி நீங்க இப்படி பண்ணலாமாஜி.?.
.பிண்ணனி இசையில் ஜீவீ பிரகாஷ் மிகவும் பிண்ணனியில் இருக்கிறார்.மெலடியாய் அவர் போட்டிருக்கும் இசை காதுக்கு கிளடியாய் கேட்கிறது.
இந்தப்படத்தின் முக்கியமான அம்சமாக நான் நினைப்பது பாடல்வரிகளைத்தான். மெய்சிலிர்க்க வைக்கும் உச்சக்கட்ட இலக்கியத்தரமான வைர வைடூரிய ,கோமேதக வரிகள் தனுஷாலும் ,செல்வராகவனாலும் எழுதப்பட்டுள்ளன.
 “அடிடா அவள மிதிடா அவள, உதைடா அவள,
 வெட்றா அவள... சரியா வரல.....
 ஒண்ணுமே புரியல,,,,,
“ஓட ஓட ஓட தூரம் குறையல,,,
,பாட பாட பாட பாட்டு முடியல,,,
,போகப்போகாப்போக ,ஒண்ணும் புரியல,,,
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கல,,,

,இப்படி சகட்டுமேனிக்கு தறிகெட்டு ஓடுகின்றன பாடல்
வரிகள்,..செல்வராகவனின் இந்தப்படத்தைப்போலவே. 
அதீத புத்திசாலித்தனத்துக்கும் பைத்தியக்காரத்தனத்துக்கும் நூலிழைதான் இடைவெளி என்பார்கள். இந்தப்படத்தைப் பார்க்கும்போது அது ஏன் ஞாபகத்துக்கு வந்துதொலைக்கிறது என்று தெரியவில்லை..

2 comments:

  1. தனித்தனியா மொக்கை போட்டது போதாதுன்னு இப்படி கை கோர்த்திட்டு வேற வரணுமா அண்ணனும், தம்பியும்? நான் திருட்டு வி.ஸி.டி.யில் கூட பார்க்க போறதில்லை முத்து. தேங்க்ஸ்.

    ReplyDelete
  2. முத்துஜி, மறுபடியும் பேனாவ தூக்கிட்டீங்களா! இனி செத்தாய்ங்க... கொடம்பாக்கத்து மெண்டல்கள்!

    ReplyDelete