Saturday, July 7, 2012

விமர்சனம்’நான் ஈ’ - நாயர் கடையில டீ சாப்பிடுது ஈ



 செவிவழிச்செய்திகளை  எப்போதும் தீரவிசாரித்துவிட்டே நம்ப வேண்டும்போல. நான் கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டேன்.

சங்கதி  இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிகாரு பற்றியதுதான். செய்தித்தாள்களிலும், மற்ற ஊடகங்களிலும் ராஜமவுலி தெலுங்கில் தொடர்ந்து 5 ஹிட்டுக்கள் தந்த ஆச்சர்யத்துக்கு சொந்தக்காரர் என்பதாகவே சொல்லிவந்தார்கள்.

நமக்கு விக்ரமார்க்குடு’, ‘மகதீராதவிர மற்ற படங்களின் பெயர் தெரியாதே என்பதற்காக இன்று காலை, விக்கிப்பீடியாவுக்குள் நுழைந்து ராஜமவுலியை சந்தித்தேன்

 
ஆச்சர்யம் என்ற வார்த்தைக்கு அண்ணன் வார்த்தை இருந்தால் அதைத்தான் பயன்படுத்தவேண்டும்.
2001-ல் ஜூனியர் என்.டி.ஆருடன்,’ ஸ்டூடண்ட் நம்பர்1-ல் துவங்கி, ’சிம்மாத்ரி’ ’ஷை சத்ரபதி’  ‘விக்ரமார்க்குடு’ ‘யெமதொங்கா’ ’மகதீரா, ’மரியாத ராமண்ணா வரை தொடர்ந்து எட்டு ஹிட்டுக்கள் தந்திருக்கிறார் ராஜமவுலி. ‘நான் ஈஅவரது 9 வது ஹிட்டு.

தமிழில் பாரதிராஜாவும், செல்வமணியும் தொடர்ந்து 5 ஹிட்டுகள் வரை கொடுத்ததாக ஞாபகம்.
5 வது வெற்றிப்படம், செம்பருத்திஎன்று நினைக்கிறேன், ‘தொடர்ந்து வெற்றிகளா சந்திச்சி வெற்றிங்கிற வார்த்தையைக்கேட்டாலே எனக்கு போரடிக்குது’’ என்று போட்டி சாப்பிட்டபடி பேட்டிகொடுத்தார் செல்வமணி. அடுத்து அவரால் வெறுமனே போட்டி மட்டுமே சாப்பிட முடிந்தது.

ஆனால் ராஜமவுலியை இத்தனை வெற்றிகள் எதுவும் செய்ததாகத்தெரியவில்லை. ஒரு முதல் பட இயக்குனருக்கான பரவசத்தோடே தனது ஒன்பதாவது படத்தையும் இயக்கியிருப்பதை படம் முழுக்க தரிசிக்க முடிகிறது
 


 சரி , இனி நான் ஈவிமரிசனம் படியுங்கள்.

திரையில் டைட்டில் கார்டுகள் ஓடத்துவங்குகின்றன.
நமக்கு முகம் காட்டப்படாத ஒரு குந்தை தன் தந்தையிடம்,’’அப்பா எனக்கு துக்கமே வரலை. ஒரு கதை சொல்லுங்க’’முரட்டுப்பிடிவாதம் பிடிக்கிறாள்.

முதலில் மறுக்கும் அப்பா, வழக்கம்போல் ஒரு ராஜா ராணி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அய்யோ அப்பா ராஜா ராணி கதை போரு. ஏழு கடல், ஏழு மலை தாண்டி...ஷ்.. சரியான போருப்பா. அப்பா வேற கதை சொல்லுங்க. அப்பா வேற கதை சொல்லுங்க.அப்பா வேற கதை சொல்லுங்க’’

‘’
அய்யோ பாப்பா நிறுத்து. ஈ மாதிரி காதுகிட்ட நொய்ன்னுட்டு’’

சொல்லிக்கொண்டிருக்கும்போதே,’’ ஆங் பாப்பா ஈயோட கதை ஒண்ணு சொல்றேன் கேளு’’ என்றபடி, இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத புதுக்கதை ஒன்றை சொல்ல ஆரம்பிக்கிறார்.

’’ஒரு ஊர்ல சுதீப்புன்னு ஒரு கெட்டவன் இருந்தானாம்...’’என்றவுடன் திரையில் விஷுவல்கள் விரிய ஆரம்பிக்கின்றன.

தனக்கு இரண்டு வருடமாக எந்தவித க்ரீன் சிக்னல்லையும் காட்டாத சமந்தாவை பென்சிலை சீவும் பெண் சிலையேஎன்கிற ரீதியில் லவ்வோ ல லவ்வென்று லவ்வுகிறான் நானி.. அத்தனையும் உள்ளூர ரசித்தபடி, அவனையும் வி அதிகம் காதலித்தபடி சமந்தா நாட்களை நகர்த்திக்கொண்டிருக்க, அவர்கள் வாழ்க்கையில் சுதீப் குறுக்கே வருகிறான்.

 கொடிய கோடீஸ்வரனான சுதீப், சமந்தாவை அடையும் ஆசையில் படம் துவங்கிய அரைமணி நேரத்துக்குள் நாயகன் நானியை  கொன்றுவிட, உடனே அடுத்த பிறவியாய் ஈ அவதாரம் எடுத்து வந்து, சுதீப்பை கதிகலங்கடித்து பழி வாங்குவதுதான் கதை.
இப்படி மொத்தக்கதையையும் சொல்லிட்டா, பாக்கிறப்ப சுவாரசியம் போயிராதா என்ற சந்தேக  கேள்வியெல்லாம் வேண்டாம். கதை மொத்தத்தையும் வரி விடாமல் படித்துவிட்டுப்போனாலும், பரவசத்தோடு பார்க்கும் வகையில் ஒருவித மேஜிக்கல் மேக்கிங் இயக்குனர் எஸ்.எஸ்.சந்திரமவுலிக்கு கைவரப்பெற்றிருக்கிறது.

அதிலும், கருமுட்டையிலிருந்து ஈயாய் வெளியேறி, ஒவ்வொரு மரண கட்டங்களையும் தாண்டி வருவதை சொல்லியிருக்கும் விதத்தில், இந்திய சினிமாவின் ராஜாதான் மவுலி.

படத்தில் டூயட், குத்துப்பாடல்கள் இல்லை. சண்டை காட்சிகள் இல்லை. ஒரெ ஒரு காட்சியில் மட்டும் சந்தானம் எட்டிப்பார்த்துவிட்டு, ’இந்தப்படத்துக்கு மட்டும் போதும் நானெல்லாம் தேவையே இல்லைப்பாஎன்று  ஓடிப்போகிறார். படம் பார்க்கத்துவங்கும் முன்பே உங்களுக்கு மொத்தக்கதையும் தெரியும் என்கிற போதிலும், இயக்குனரின் சுவாரசியமான திரைமொழி நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறது.

கேள்விகள் எதுமின்றி அவரது பரவச கதை சொல்லும் பாணியில், அதைக்காட்சிப்படுத்தியிருக்கும் வித்தையில் அப்படியே கட்டுண்டு கிடக்கிறோம்.

படத்தின் துவக்கத்தில் நாலைந்து காட்சிகளில் மட்டுமே வரும் நாயகன் நானி அப்படியே மனசை அள்ளுகிறார். சமந்தாவும் சமர்த்தான சாய்ஸ். அதிகம் அலட்டிக்கொள்ளாத இயல்பான நடிப்பு.

வில்லன் சுதீப் அப்படியே இளமைக்கால ரகுவரனை ஞாபகப்படுத்துகிறார். புத்திசாலித்தனமாக அவருக்கு டப்பிங் கொடுக்கவும் ரகுவரனை நினைவூட்டும் குரலையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மரகதமணியின் மயக்கும் இசையும், கே.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் தங்கள் இருப்பை எங்கும் தனியாக தெரிவிக்காமல் இயல்பாய், ஒளியை ஈதல் இசைபட வாழ்தல் என்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
 

படத்தில் குறைகளே இல்லையா என்ன?

 ஒரு ஈ ஹெல்மெட் போடுமா? ஒரு ஈ பிரபுதேவாவையும் விட சிறப்பாக டான்ஸ் ஆடுமா?? ஒரு ஈ நாயர் கடையில் டீ குடிக்குமா???

ஈப்படி கேள்விகள் ஏராளம் கேட்கலாம்.

 ஆனால் லாஜிக் பார்க்க ஆரம்பித்தால் சில நல்ல விசயங்களை ரசிக்க முடியாது.

முதல்வேலையாக உங்கள் வீட்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு ஒரு இரண்டேகால் மணி நேரத்துக்கு நீங்களும் குழந்தைகளோடு குழந்தைகளாக மாறுங்கள்.






13 comments:

  1. நல்ல விமர்சனம் நன்றி ஓஹோ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா பதிவு போட்ட உடனே பாராட்டா நன்றி.

      Delete
  2. ஆகா! எல்லோரும் ஓரே அடியாக புகழ்கிறீர்களே! பார்த்தே தீரனும் போல!

    ReplyDelete
  3. பொதுவாக படத்தை பார்த்துவிட்டுதான் விமர்சனங்களை படிப்பேன். சரி தெலுங்கு டப்பிங்க் படம்தானே, எங்கே பார்க்க போகிறோம் என்று விமர்சனங்களை படித்தால், அனைவரும் “ஒஹொ” என்று சொல்கிறார்கள். உண்மையாக ஒஹொவா என்று இங்கே வந்து சோதனை செய்தால், உண்மையாகவே படம் ஓஹோதான். பார்த்துவிட வேண்டியதுதான்.

    ச்சே...திராவிட கொள்கைகள் இப்படி தமிழனை தெலுங்கு படத்தை பாராட்ட வைத்துவிட்டதே.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல்தான். நம்ம படங்கள அவிங்க பாக்கலியா?

      Delete
  4. ஓஹோ புரடக்சனுல ஓஹோன்னு பேசப்பட்ட மொதல் படம்னு நினைக்கிறேன், படமும் அருமை விமர்சனமும் அருமை

    ReplyDelete
  5. ’பில்லா ‘தில்லா வர்றார் பாஸ்.நல்லா இருந்தா ஒரே நேரத்துல பத்துப்படம் பாக்கக்கூட நம்ம ஜனங்க ரெடி.

    ReplyDelete
  6. இல்லையே இந்த வருஷம் ஒரு ஏழெட்டுப்படத்தை பத்தி நல்லபடியா எழுதியிருக்கேனே?

    ReplyDelete
  7. செல்வமணி கொடுத்த முதல் மூணுதான் ஹிட். அது சரி ஒரு படத்துக்கே தலைக்குமேலே ஒளிவட்டம் ஏறி, தாடியை தடவி 'இளைஞர்கள் உழைக்கத் தயங்கறாங்க' என்றோ 'ரொம்ப அவசரப்படறாங்க' என்றோ மோவாயில் கைவைத்து சொல்லிவிட்டு அடுத்த படத்தில் காணாமல் போகிற காலம் இது.

    ReplyDelete
  8. செல்வமணி கொடுத்த முதல் மூணுதான் ஹிட். அது சரி ஒரு படத்துக்கே தலைக்குமேலே ஒளிவட்டம் ஏறி, தாடியை தடவி 'இளைஞர்கள் உழைக்கத் தயங்கறாங்க' என்றோ 'ரொம்ப அவசரப்படறாங்க' என்றோ மோவாயில் கைவைத்து சொல்லிவிட்டு அடுத்த படத்தில் காணாமல் போகிற காலம் இது.

    ReplyDelete
  9. \\தமிழில் பாரதிராஜாவும், செல்வமணியும் தொடர்ந்து 5 ஹிட்டுகள் வரை கொடுத்ததாக ஞாபகம்.
    5 வது வெற்றிப்படம், செம்பருத்தி’ என்று நினைக்கிறேன், \\

    அண்ணே

    செல்வமணி - மூணாவது படம் தான் செம்பருத்தி. அதன்பின் குற்றப்பத்திரிக்கை இயக்குறேன்னு போயி அது அவர் தொழிலுக்கு உத்திரகிரியை பத்திரிக்கையாய் மாறிடுச்சு. சில நாள் கழித்து மக்களாட்சி என்ற சுமாரான படம் கொடுத்தார். ஆனால் முத்து வோடு வெளிவந்ததால் அது பிரகாசிக்கவில்லை.

    ஆனால் ஷங்கர் 5 தொடர்ந்து கொடுத்திருக்கிறார்.

    ஜெண்டில்மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன்

    ReplyDelete