Wednesday, December 24, 2014

' மூவி ஃபண்டிங்கின் கிளைமாக்ஸ் வாரம்’

'பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்... ஐயனே என் ஐயனே...’ தலைவரின்  பாடல் சதா மனதில் ஒலித்துக்கொண்டே இருக்க ...’மூவி ஃபண்டிங்’ தொடர்பான மூவிங்கில் மட்டுமே அலைந்த  இந்த இரண்டு மாதங்களும்,  ஒரு படப்பிடிப்பின் போது மனதில் நிலவும் லேசான படபடப்புடனேயே கழிந்தது.

பிரசாத் லேப்பில்கடந்த அக்டோபர் 16 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவிக்கப்பட்டு  துவங்கிய இந்தப்பயணம், ‘மூவி ஃபண்டிங்’ நடந்தது என்ன?’ என்ற அறிவிப்புடன், அதே பிரசாத் லேப்பில் வரும் டிசம்பர் 30 தேதி நடக்கவிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவு அடைகிறது.


ஒரு நூலிழை தவறினாலும் தப்பான ஒரு தோற்றம் தந்துவிடக்கூடிய இத்திட்டத்தை, எங்கள் இருவர் மீது கொண்டிருந்த அன்பினாலும் நம்பிக்கையாலும் மக்களிடம் சரியாய்க் கொண்டுபோய்ச் சேர்த்த நண்பர்களுக்கு நன்றி கூறவும், இத்திட்டத்தில் இணைந்து எங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சக தயாரிப்பு சகோதரர்களை மேடையேற்றவும் திட்டம்.

ஏற்கனவே தெரிந்த நண்பர்களின் உதவியுடன் புதிய நண்பர்கள் சிலர் கரம் கோர்த்தது, ஆச்சரியத்தையும் பெரும் மன பலத்தையும் அளித்திருக்கிறது.

 தற்போது ஷூட்டிங் கிளம்ப நேரமாச்சி.  சுற்றி வளைத்து பேச விரும்பவில்லை. நாளை எனது அண்ணன் ஒருவர் அளிக்கும் நான்கு லட்சம் ரூபாயுடன் சேர்த்து, மொத்த வரவு அறுபது லட்சமாக ஆகி, எனது’ரூபச்சித்திர மாமரக்கிளியே’  படத்துக்கான தேவை 85 சதவிகிதம் நிறைவுபெறுகிறது.

இன்னும் தேவை சரியாக பத்து லட்சம். இதை நான் ஏற்கனவே சொன்னபடி சிறு முதலீடுகளாக, அதாவது தலைக்கு பத்தாயிரம் வீதம் நூறு பேரிடம் பெற்று அவர்களையும் இணைத் தயாரிப்பாளர்களாக்கிக் கொள்ளத்திட்டம். 



இந்தத்தொகையை, சிரமமில்லாமல், உதவக்கூடிய நண்பர்களது பட்டியலை நான் எழுதத்துவங்கியபோது சுமார் 70 பேர் வரை மட்டுமே தேறியிருக்கிறது என்பதால், புதிதாய் இந்தத்திட்டத்தில் இணையும் நண்பர்கள் சிலரையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன். குறிப்பாக ‘ஓஹோபுரடக்‌ஷன்ஸை’ ரெகுலராக வாசிக்கும் நேசிக்கும் நண்பர்களிடமிருந்து.

இந்தப்பணத்தை  திரும்ப கொடுப்பது பெரும்பொறுப்பு என்பது மட்டுமின்றி, நீங்கள் இந்த சமயத்தில் செய்த உதவியை எப்படியெல்லாம் கவுரப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் கவுரப்படுத்த, என் உழைப்பை செலுத்துவேன்.

நீங்கள்  உதவ அவகாசம் கொடுக்கும் வகையில் மூவி ஃபண்டிங்கில் எனது படத்துக்கான கெடு தேதியை மேலும் 5 நாட்கள் அதிகரித்திருக்கிறோம்.

கேள்விகள், சந்தேகங்களுக்கு, உதவுவதற்கு எனது அலைபேசி எண் 98409 14026,  மெயில் ஐடி [muthuramalingam30@gmail.com] மற்றும் கமெண்ட் பெட்டி வழியாகவும் தொடர்பு கொள்ளுங்கள்.

அடுத்த ஐந்து நாட்களும் உங்களுக்காகவே காத்திருக்கிறேன்.


4 comments:

  1. all the best for both of you.You both will rock the cinema world.All the best once again.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ethirparathathu சார்....

    ReplyDelete
  3. மிக நன்றாக நடக்கும் ஐயா.... சூர்யா

    ReplyDelete