Saturday, December 10, 2011

கடைசியில எங்கள வச்சே காமெடியா?

ாஅரசல்புரசலாக அந்தச்செய்தி நடமாடியபோது, அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.ஏனெனில் சினிமாவில் சம்பந்தப்பட்டவர்களின் வாய்வழியாக வரும் வரை,அதை நம்பவேண்டியதில்லை.
அந்த நியூஸையும் அப்படித்தான் நினைத்துக்கொண்டு எல்லோரும் நிம்மதியாக இருந்தார்கள். ஆனால் அந்த நிம்மதி இன்று காலைவரைதான் நீடித்தது.
இன்றைய காலை தினசரி ஒன்றில் அவரே அவரது சொந்தவாயால் அது உண்மைதான் என்று சொல்லிவிட்டார்.
தகவல் அறிந்ததும் ஸ்டண்ட் யூனியன் ஒரு நிமிடம் கிடுகிடுத்தது.
தமிழ்சினிமா வில்லன்கள் ஐயய்யோ நம்ம கதை முடிஞ்சது’ என்று எச்சில் முழுங்க ஆரம்பித்தார்கள்
.பிரகாஷ்ராஜ் பின்னங்கால் பிடறியில் பட பெங்களூர் கிளம்பிவிட்டதாக தகவல்.
பொன்னம்பலம் பொட்டிபடுக்கைகளை கட்டிக்கொண்டு எங்கோ போகக்கூடாத இடத்துக்கு போகப்போவதாக தகவல்.
.மகாநதி’ சங்கர் காசிக்குப்புறப்பட்டு, அகோரியாக மாறப்போவதாக அறிக்கை.
பசுபதி பழையபடி கூத்துப்பட்டறைக்குப்போய் தூத்திப்பெருக்கப்போவதாக நியூஸ்.
என்ன ஆச்சி இந்த வில்லன்களுக்கு? ஏன் இப்படி தெரிச்சி ஓடுறாங்க??
ஒண்ணுமில்லிங்கண்ணா,’வழிப்போக்கன்’ங்கிற படத்தில, நம்ம காமெடி நடிகர் விவேக் வில்லனா நடிக்கிறாராம்.
அது ஒர்க் அவுட் ஆனா, வில்லனாவே கண்டினியூ பண்ணலாம்னு பாக்குறாராம்.







படங்கள்ல வரவர, வில்லன்கள வச்சி டைரக்டர்கள் காமெடி பண்ண ஆரம்பிச்ச ஒரே காரணத்துக்காக,இண்டஸ்ட்ரியே கதிகலங்கி,முழிபிதுங்கி நிக்கிறமாதிரி இப்பிடி ஒரு முடிவை விவேக் எடுத்திருக்கவேண்டாம்.

2 comments:

  1. unga commedykku oru alave illaya ,..SIR...!

    ReplyDelete
  2. நம்மள வச்சு யார்தான் காமெடி பண்ணல?

    ReplyDelete