Sunday, December 18, 2011

விகடனைவிட்டு வெளியேறுகிறா ரா.கண்ணன்?

விரைவில் ஆன்லைனில் வரவிருக்கும் எனது hellotamilcinema.comல்‘ நாலாம் உலகம்’ என்ற தலைப்பின்கீழ் தொடர்ந்து பத்திரிகைகளைப்பற்றியும், பத்திரிகையாளர்களைப்பற்றியும் நல்லது கெட்டதுகளை  எழுதவிரும்புகிறேன். நம்புங்க குவார்ட்டருக்கு மேல அதிகமா அடிச்சா ,என்னைப்பத்தி கூட நானே எழுதுவேன்.

பொதுஜனங்களுக்கு பாவம், நகரசபை,சட்டசபையில நடக்கிற கூத்துகளைவிட பத்திரிகை
ஆபிஸ்கள்ல நடக்கிற  கூத்து இன்னும் சுவாரசியமானதுங்கிறது தெரிய வாய்ப்பில்லை.

கட்சி விட்டு கட்சி தாவுற மாதிரி,காலங்காலமா குமுதம் நிருபர்கள் விகடனுக்கு போறதும்,விகடன் பார்ட்டிங்க குமுததுக்கு போய் கும்மியடிக்கறதும் சகஜம்.போன வாரம் கூட சேஷையா ரவியும்,வெங்கட்டும் விகடன்ல்ருந்து குமுதத்துக்கு போயிருக்காங்க.

அதுவும் சமீபத்துல,நடக்குற உள்நாட்டுச்சண்டையால , குமுதத்துல நடக்குற கூத்துக்கள் கொஞ்சநஞ்சமில்ல.

 ஒரு வயசான பாட்டிய படிதாங்கலா கூட்டிட்டுப்போன போனதுக்காக ( அந்த பாட்டி யாருங்கிறதுதான் மேட்டரு)  ரிப்போர்ட்டர்  பொண்ணை பத்து நிமிஷத்துல சஸ்பெண்ட் பண்றாங்க.

 பச்சைக்கலர் சட்டை போட்டுட்டு போனா சப்-எடிட்டரை  பம்பாய்க்கு டிரான்ஸ்பர் பண்றாங்க. மஞ்ச கலர் சட்டை போட்டுட்டு போனா மைசூருக்கு மாத்துறாங்க.

அஞ்சு நிமிஷம் ஆபிஸுக்கு லேட்டா வந்தா அரைநாள் சம்பளத்தை கட் பண்றாங்க, ஆனா ஆனந்தவிகடன் லருந்து வேலைக்கு வந்தா மட்டும் அம்பதாயிரத்துக்கு மேல சம்பளம் தர்றாங்க.

இப்படிக்கொதித்துப்போயிருக்கும் குமுதம் அன்பர்களே..., கிசுகிசு எழுதியே களைத்துப்போன  வம்பர்களே, ..விரைவில் இன்னொரு இடியாப்பச்செய்தி உங்கள் செவிகளில் இடியாய் வந்து இறங்கப்போகிறது.

தற்போதைய ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் மிக விரைவில் குமுதம் ஆசிரியராகப்பொறுப்பேற்கப்போகிறார்.இது தொடர்பாக கடந்த வாரம் மட்டும் மூன்று சந்திப்புகள் நடந்து முடிந்துள்ளன.

இருப்பதிலேயே உயர்ந்த ஆசிரியர் பொறுப்பு,பெரிய சம்பளம்,  இன்னும் சில உபரி அந்தஸ்துகள் என்று இருக்கும்போது கண்ணன் ஏன் விகடனை விட்டு வெளியேற வேண்டும்?

கேள்வி நியாயமானதுதான்.ஆனால் இதற்கான பதில்தான் உங்களுக்கு சற்று அநியாயமாகப்படும்.

இயக்குனர் பாலாவுடன் கண்ணனுக்கு இருக்கும் நெருக்கம்  கண்ணன் ஒரு கைக்குழந்தைகளும் அறிந்தது.அந்த நெருக்கம் பாலா விகடனில் ‘இவன் தான் பாலா’ தொடரை எழுதியபோது அதிகரித்தது.(பாலாவின் அந்தத்தொடரை கண்ணன் தன் சொந்தக்கையால் எழுதினார்.)

இதன்பிறகு பாலாவின் டிஸ்கசன்களிலும் கலந்துகொள்ள ஆரம்பித்தார் கண்ணன்.அதுவும் தற்போது நடந்து வரும் ‘எரியும் தனல்’ படத்துக்கு ஒரு புரடக்‌ஷன் மேனேஜர் போல வேலை செய்ய ஆரம்பித்தார் கண்ணன்.
படத்துக்காக பாலாவால் மொட்டை அடிக்கப்பட்ட 200 பெண்களும் கண்ணன் செலக்‌ஷன் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதனால் அடிக்கடி விடுமுறை எடுப்பதும்,குறைந்த நேரத்தையே விகடனில் செலவழிப்பதுமாக இருந்தார் கண்ணன்.

இதை பல முறை விகடன் எம்.டி சீனிவாசன் கண்டித்துப்பார்த்தார்.எடிட்டராச்சே கண்டிப்பு எடுபடவில்லை.

கடந்த வாரம் ஒரு நாள் கண்ணனை தன் அறைக்கு அழைத்த சீனிவாசன், இனிமேல் பாலா படத்துக்கு வேலை செய்வதாக யார் மூலமாவது கேள்விப்பட்டேன் என்றால், புத்தாண்டு உங்களுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கொஞ்சம் ஓவராகவே எச்சரித்தாராம்.

என் லட்சியம் சினிமாதான் என்றாலும்  விகடனுக்காக 25 வருடங்களாக உழைத்து வருகிறேன், எனக்கே எச்சரிக்கையா என்று எரிச்சலடைந்த கண்ணன், குமுதத்திலிருந்து ஏற்கனவே  பலமுறை தனக்கு வந்த ஆஃபரை இந்த முறை ஏற்றுக்கொள்வது என்ற முடிவெடுத்துவிட்டாராம்.

இதே போன்ற ஒரு முடிவை சுமார் எட்டு ஆண்டுகளுக்கும் முன்பு எடுத்து அப்பாயின்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப்போட வந்திருந்த கண்ணனை த்தடுத்து நிறுத்தி’’ உங்களுக்கு இந்த ஆபீஸ் ஒத்து வராது பாஸ். பேசாம விகடன்லேயே கண்டினியூ பண்ணுங்க’’என்று சொல்ல ஒரு  நல்ல நண்பர் இருந்தார். பாவம் நடுவுல ஸ்கூட்டர் ஆக்ஸிடெண்ட்ல அவர் செத்துப்போயிட்டார். குமுதம் நிலைமை இப்பவும் அதேதான் கண்ணனுக்கு தடுத்துச்சொல்ல யாரு இருக்கங்களோ?

மேட்டரு கடைசியில இவ்வளவு சோகமா முடியும்னு நான் எதிர்பார்க்கலை.இனிமே இப்பிடி நடக்காம பாத்துக்கிறேன்.

1 comment:

  1. என்ன ஆச்சு...?
    சொன்னது நடந்திருச்சா?

    ReplyDelete