Sunday, December 11, 2011

மெல்லத்தமிழ் இனி SUICIDE பண்ணும்




ரியல் எஸ்டேட் அதிபர்
நா.முத்துக்குமாரில் தொடங்கி வாரிசுப்பாடலாசிரியர் வைரமுத்து கார்க்கி வரை, தமிழ்சினிமாவில் சுமார் ஒரு டஜன் பாடலாசிரியர்கள் பாட்டெழுதி ‘பொழப்பு ‘ நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டில் இவர்கள் நிலைமை என்ன ஆகும் என்பதை நினைத்தால் எனக்கே சரியாக தூக்கம் வரமாட்டேன்  என்கிறது என்றால், சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?
என்னதாம்பா உன் பிரச்சினை என்கிறீர்களா?
கடந்த இரு மாதங்களில், செல்வராகவன், தனுஷ், சசிக்குமார், சமுத்திரக்கனி, சிம்பு, உட்பட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களின் படங்களில் டைரக்டர்களும்,நடிகர்களுமே பாடல்’ எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
இப்போது, கவிஞர்களின் ‘அடிவயுத்துல அடிக்கிற’ இந்தப் பட்டியலில் புதுசாக சேர்ந்திருப்பவர்,நடிக்கிறேன் பேர்வழின்னு, தாடிய சொறிஞ்சே 60 லட்சம் சம்பளம் வாங்கிய சுந்தர்.சி.

‘பசங்க’ விமலை வைத்து இவர் இயக்கப்போகும் ’மசாலா கபே’ படத்துக்கான அத்தனை பாடல்களையும் இவரே எழுதப்போறாராம்.
சொல்லி வைத்ததுபோல் இப்படி எல்லா டைரக்டர்களும் பாட்டெழுத கிளம்பியதின் பின்னணி என்னவாக இருக்கும் என்று அறிய முதலில் செல்வராகவன் ஏரியாவில் துளாவினேன்.
நா.முத்துக்குமாரும் இவரும் நல்ல உறவில்தானே இருந்தார்கள்.திடீரென அவரைக்கழற்றி விட்டுவிட்டு அண்ணனும் தம்பி இப்படி ‘கொலவெறியுடன் கோதாவில் இறங்க காரணம் என்ன என்று விசாரித்தபோது,ஒரு சுவாரசியமான தகவல் கிடைத்தது.
பாட்டு எழுத என்று நா.முத்துக்குமாருடன் எப்போது அமர்ந்தாலும், ஒரு மணி நேரத்தில் ஐம்பது நிமிடத்தை ரியல் எஸ்டேட் பற்றி பேசியே நா.மு. கழிப்பாராம்.நெசப்பாக்கத்துல சீப் ரேட்டுல ரெண்டு கிரவுண்ட் வாங்குனேன்,சாலிகிராமத்துல ஓரு இடத்துல மூனு கிரவுண்ட் வருது ,சீக்கிரமே அதை வளைச்சிப்போடனும்...இப்படியே பேசிக்கழித்துவிட்டு, கடைசி பத்து நிமிஷத்தில் ‘பாட்டு’ என்று ஒன்று எழுதிக்கொடுத்துவிட்டுப் போவாராம்.நம்ம காசுல கிரவுண்டுகளை வாங்கிப்போட்டுட்டு, நம்ம கிட்டயே உதாரா? ஏன்  நாம ஒரு ரவுண்டு எழுதிப்பாக்கக்கூடாது’ என்று செல்வா எடுத்த முடிவுதான்,’’ஓட ஓட ஓட ஓட்டம் முடியலை’ என்று ஆரம்பித்து கடைசியில’’ யாரு வேணும்னாலும் பாட்டு எழுதலாம். அசிஸ்டண்டுங்க கிட்ட கேட்டும் எழுதலாம் என்று ஆகிவிட்டது.
எனக்குத்தெரிந்த வரையில், இனி கதை,திரைக்கதை,வசனத்தோடு,பாடல்களையும் அனைத்து டைரக்டர்களும் தாங்களே எழுதிக்கொல்வார்கள் என்றே தெரிகிறது. வரிகளின் தரம் தரைமட்டமாகும். தமிழ் தற்கொலை செய்துகொள்ளும்.பின்னர் அதுவே பழகிப்போகும்
.டைனோசர் என்ற உயிரினம் ஒன்று இருந்தது என்று ஸ்பீல்பெர்க் படம் எடுத்துக்காட்ட வேண்டி வந்தது போல், கவிஞர்கள் என்று கொஞ்சபேர் இருந்தார்கள் என்று பெர்க்ஸ்பீல் என்பவர் படம் எடுத்து விளக்கவேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.
வைரமுத்து பையனுக்கு பட்டா கொடுத்துவிட்டு போய்விட்டார். நா.முத்துக்குமார் நாலு தலைமுறைக்கு கிரவுண்டுகள் வாங்கிப்போட்டுவிட்டார்.அதனால் அவரும்கவலைப்படத்தேவையில்லை.
மற்ற கவிஞர்களை நினைத்தால்தான்  குவார்ட்டர் வாங்கி அடிக்கணும்போலத்தோணுகிறது.‘
’குவார்ட்டர் வாங்கிக்குடிக்க காசு குறையுது..
சைடிஷ் வேணும்னு நினைச்சா தலையை சுத்துது..நம்ம
கவிஞர்கள் நிலையை நினைச்சா கண்ணைக்கட்டுது..
கண்ணுமுழிக்குள்ள தண்ணிமுட்டுது..
.( அட எனக்கும்கூட பாட்டு எழுத வரும்போல?)

1 comment: