Friday, April 6, 2012

விமர்சனம் ‘மழைக்காலம்’- தயவு செஞ்சி மழைக்காகக் கூட தியேட்டர் பக்கம் ஒதுங்கிடாதீங்க

அடுத்த இளைய தளபதிய நல்லா பாத்துக்கங்க
நிர்வாணமா நடிச்சி இப்பிடி கொலைப்பழிக்கு ஆளாயிட்டியே சரண்யா?

நடிகை சரண்யா நிர்வாண மாடலாக போஸ் கொடுத்திருக்கிறார். அந்தக்காட்சியில் நடித்தபோது ஸ்கின் ட்ரெஸ் போட்டுக்கொண்டு நடித்தார். இல்லையில்லை உண்மையிலேயே நிர்வாணமாக நடித்தார். ஸ்கின் ட்ரெஸ் போட்டதாகச் சொல்வதுதான் நடிப்பு.

இப்படி சில வாரங்களாக, வாலிப வயோதிக அன்பர்களை அல்லல்பட வைத்த ‘மழைக்காலம்’ படத்தை நேற்று 4 ப்ரேம்ஸ் தியேட்டரில், அதுவும் நடிகை சரண்யாவின் அடுத்த ரோவில் அமர்ந்து பார்த்தேன். ப்ளவுஸுக்குப் பின்னால முந்தில்லாம் ஜன்னல் வச்சீங்க. அப்புறமா பெருந்தன்மையா கதவு வச்சீங்க. இப்ப என்னடான்னா, சரி படிக்கிறவங்க வயித்தெரிச்சல் நமக்கெதுக்கு?

அவர் உண்மையிலேயே நிர்வாணமாக நடித்தாரா, ஸ்கின் ட்ரெஸ் போட்டு நடித்தாரா என்று தெரிந்துகொள்ளுமுன், படத்தோட கதையைப்பார்ப்போம்.

கமலா தியேட்டர் ஓனரின் தம்பி ஹீரோ. பேரு விஜய். பைக்கை எடுத்து எங்காவது சுத்திக்கொண்டிருப்பதுதான் அவர் பார்க்கும் வேலை. அப்படி சுத்திக்கொண்டிருக்கும் ஒரு நாளில், ‘புதிய கீதை’ விஜய் மாதிரியே, நம்ம விதியே பேதை விஜயும், பைக்கின் சைடு ஸ்டேண்டை எடுத்துவிட மறந்து ஓட்டிக்கொண்டிருப்பதை  ஹீரோயின் சரண்யா பார்த்து ஹீரோவுக்கு சொல்ல, சும்மா சுத்திக்கிட்டிருக்கும் பிள்ளைக்கு காதல் வர இதைவிட வலுவான காரணம் வேறு வேண்டும்?

 காதல் வந்ததும் ஒரு ஏழெட்டு சீன்களுக்கு ஊர்சுற்றிவிட்டு,’ கர்த்தருக்கு அடுத்த படியா உன்னத்தான் நேசிக்கிறேன். ஆனா என்ன விட்டுட்டு வேற பொண்ண கல்யாணம் கட்டிக்கோ’ என்கிறார்  சரண்யா.

கமலா தியேட்டரின் குட்டி ஓனரோ, அதை ஒப்புக்கொள்ள மறுத்து, சரண்யாவுக்கு லவ் டார்ச்சர் கொடுக்கிறார்.

மவனே பொழைச்சிப்போன்னு நல்லபடியா சொன்ன கேக்கமாட்டியில்ல’ என்று மனசுக்குள் நினைத்த படி.  நம்ம ஹீரோவை  ஓவியக்கல்லூரி ஒன்றுக்கு அழைத்துப்போய், தான் ஒரு நிர்வாண மாடல் என்று அப்படியே  வந்து காட்டி நொந்து போகவைக்கிறார்.

உடனே டைரக்டர், ஹீரோவின் இதயத்துக்கு கிராபிக்ஸ் உத்தியின் உதவியுடன் ஒரு ஜூம் ‘போட ஹீரோவின் இதயம் உடைந்து நொறுங்குவதைக்காட்டி, நம்மை வாட்டி வதைக்கிறார்கள்.

இதில் பதினைந்து நிமிடம் வசனமே இல்லாத க்ளைமேக்ஸ் என்ற விளம்பரம் வேறு.

தீபன் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார்.காதல் காட்சிகளில் காதல் இல்லை. காமெடி காட்சிகளில் காமெடி இல்லை.மொத்தத்தில் படத்தில் அப்படி என்று சொல்லப்படுகிற  எதுவுமே உருப்படியாக இல்லை.

ஸ்ரீராம் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கிறார். சீக்கிரமே இளையதளபதியின் இடத்தைப்பிடித்து அவரைப் பழைய தளபதி ஆக்கும் எண்ணத்துடன் தான் படத்தில் இவரது கேரக்டருக்கு விஜய் என்று பெயர் வைத்தார்களாம்.இவரைப்பார்த்தவுடன் பூமியில் பிறந்த அனைத்து ஜீவராசிகளுக்கும் நடிப்பு ஆசை வந்துவிடும். அப்படி ஒரு நடிப்பு.

சரண்யா நாக் க்ளைமேக்ஸில் நிர்வாணமாக நடிக்கப்போகிற ஒரே காரணத்துக்காக ஆரம்ப காட்சிகளில் அவ்வளவு இழுத்துப்போர்த்தி நடித்திருக்க வேண்டாம். கொஞ்சம் தாராளமாக இருந்திருந்தால், முதல் முறை பார்த்ததுமே ஹீரோவுக்கு  ஏற்பட்ட இதய வெடிவிபத்தை தவிர்த்திருக்கலாம்.

மற்ற படி படத்தில் இடம்பெற்ற நாலைந்து பாட்டுக்கள், யார் யாரை அடிக்கிறார்கள் என்றே தெரியாத குரூப் ஃபைட், தம்பி எதுகேட்டாலும் வாங்கித்தரத்தயாராக இருக்கும் அண்ணன் தம்பி செண்டிமெண்ட் என்று தான் கைவைத்த எல்லாவற்றையுமே பார்க்காதவர்கள் மட்டுமே ‘பொழைக்கலாம்’ என்கிறார் மழைக்கலாம்’ டைரக்டர்.

உங்க ஊர்ல ‘மழைக்காலம்’ ஸ்டார்ட் ஆயிடுச்சின்னு கேள்விப்பட்டேன்.

அப்புறம் தலைப்பை இன்னொரு தடவ படிச்சிப்பாத்துட்டு, மழையா, தற்கொலையாங்கிற முடிவை நீங்களே சொந்தமா எடுங்க.

2 comments:

  1. இனி அந்த ஏரியா பக்கம் போவோம்...?
    அப்புறம்...சரண்யாவுக்கு பின் ரோவில் உட்கார்ந்தீங்களே..ஜன்னல். கதவு பத்தி எல்லாம் சொன்னீங்க... ஏதாவது தெரிஞ்சுதா...ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. அண்ணே.. சரண்யாவை அந்தக் கோலத்துலதான் பேட்டியெடுத்தேன்..! பாப்பா நல்லாத்தானே இருந்துச்சு..!

    ReplyDelete