Tuesday, February 14, 2012

கோடம்பாக்கத்தின்’ டாப் டென்’ காதல், கண்றாவி,கத்தரிக்கா....

தியேட்டரில் ஒரு பழைய காதல்  ஜோடி:


"என்னங்க பின்னாடி ஒருத்தன் விடாம என்னையே பாத்துக்கிட்டிருக்கான்"
"அப்பிடியா ராசாத்தீ.. உன் முகத்தை கொஞ்சம் திருப்பி காட்டு, அவன் அப்பிடியே துடிச்சி சாகட்டும்".


சில படங்கள் இடைவேளைக்குப்பிறகுதான் நன்றாக இருக்கும். எனக்கும் அப்பிடித்தான். இனிமேதான் யாரையாவது சீரியஸா லவ் பண்ணனும்’’

- என் மனைவி உங்க சின்ன வயசு காதல் அனுபவங்களைப் பற்றி சொல்லுங்க என்று கேட்கும்போதெல்லாம் நான் எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொள்ளும் பதில் தான் இது.

புலி பதுங்குவது பாய்வதற்குத்தான் என்றாலும், எல்லாசமயங்களிலும் அவ்வாறு நடந்துவிடுவதில்லை.

சில  புளிகள் குழம்புக்கு ருசி சேர்ப்பதோடு ஓய்வெடுத்துக்கொள்கின்றன. அதுவும் நீண்ட காலம் பதுங்கிக்கிடக்கும் பழைய்ய்ய... புளியின் ருஷியே தனி.
எனது ஸெகண்ட் ஆஃப் புலியா, குழம்புப்புளியா என்பதை இன்னும் சில வருடங்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் சினிமாக்காரர்களின் காதல் கதைகளும், அவர்கள் காதலை ஒட்டிவெட்டி எழுதப்படும் கிசுகிசுக்களும் என்றுமே சுவாரசியமானவை. நம்மைப்போன்ற வெகுஜன மக்களின் வயித்தெரிச்சலில் அந்த கிசுக்களின் வெற்றியே இருக்கிறது.

சரி, காதலர் தினத்தை ஒட்டி கோடம்பாக்கத்துக்கு நம்மளால முடிஞ்ச சேவையை செய்வோமேன்னு நினைச்சி, கொளுத்திப்போட்டதுதான் இந்த கிசுகிசுக்கள். மேட்டரில் வாராராம் போறாராம் எல்லாம் யாரும் வக்கில் நோட்டீசு அனுப்பாமல் இருக்கத்தானாராம்.

நம்ம சினிமா நட்சத்திரங்களைப்பொறுத்தவரை, ’காதலில் ஏது நல்ல காதல் கள்ளக்காதல்?’ என்பது மிகப்பொருத்தமான கேள்வியே.


10.படம் துவங்கும்போது,  இந்தப்பூனையும் குவார்ட்டர் அடிக்குமா? என்பது போல் இருந்த  அவர், படம் ரிலீஸாகி கொஞ்சம் பிக்கப் ஆனவுடன், சரி இன்னும் ரெண்டு மூனு நாள்ல காதலர் தினம் வருது ,அதுக்காகவாவது நாம காதலிச்சிப்பாக்கலாமே, என்று காமெடி பண்ணியே களவாணி நடிகையின் மனம் கொத்திவிட்டாராம், மெரினா பீச்சில் சந்தித்த சின்ன’ நடிகர்.

 9.நாயன நடிகைக்கு ஆல்டர்னேட்டாக மாஸ்டர் பிக்கப் பண்ணியிருந்த ஹன்ஸ் புஷ்டி நடிகையை இப்போது பெரிய இடத்து பேரப்புள்ளை தன்னோடு பேக்கப் பண்ணிக்கொண்டாராம். ஒரு கல் ஒரு ஜொள் என்று பார்ர்டிகளில் இவர்கள் வடிக்கிற கூத்தே இப்போது கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ’ஆத்தே’.

8.வாராவாராம் காதலர்களை மாற்றிக்கொண்டிருக்கும் காஞ்ச’ மாடு லட்சு நடிகை இப்போது லேட்டஸ்டாக இந்திய டீமில் இடம் கிடைக்காத ஸ்ரீ சாந்தமானவரை இடுப்பில் தூக்கிக்கொண்டு அலைகிறாராம்.

7.மூனு ஷா வோ, வடசென்னை வரை வந்த நடிகரை வம்புத்தம்பியுடன் நடிக்கவிடாமல் தடுத்துவிட்டு, ஆந்திரக்கரையோரம் ராணா , ராவண்ணா படித்துக்கொண்டிருக்கிறாராம்.

6.தன்ஷிகத்தை ’அரவாணை’த்துக்கொண்ட ஆதியானவரோ, இது ஜஸ்ட் ஒன்லி லவ்தான், கல்யாணப்பேச்செல்லாம் எடுத்தா எங்கப்பா மிருகமா மாறிடுவாரு...என்று லவ்வுக்கு புது லாவணி பாடிக்கொண்டிருக்கிறாராம்.

5.மதராசப்பட்டிணத்திலிருந்து கிளம்பிப்போய், டெல்லியில் தாண்டவமாடிக்கொண்டிருந்த விஜய இயக்குனர், சமீபகாலமாக மீண்டும் வெள்ளைக்கார நடிகையுடன் ,வெள்ளாவி வச்சிதான் வெளுத்தாகளா பாடிக்கொண்டிருப்பதை அறிந்த பால் நடிகை,தேன் குடித்த நரியாக மாறி தேம்பித்தேம்பி அழுகிறாராம். நடுவில் ஒரு இயக்குனர் கூப்பிட்டாரே ‘அங்கு’ சென்றுவிடலாமா என்று தனக்குத்தானே சங்கு தேடிக்கொண்டிருக்கிறாராம்.

4.பல பெண்ணைத்தாண்டிய இயக்குனர் மீண்டும், அடியே கொல்லுதே அழகோ அல்லுதே’ பாட ஆரம்பித்து, ரெட்டி நடிகையை ‘வா சேந்து ரொட்டி சாப்பிடலாம் என்று அமெரிக்கா அழைத்துச்சென்றிருக்கிறாராம்.

3.தனது குடும்ப சூழ்நிலை’ சரியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தினாவெட்டான இரண்டெழுத்து இசையமைப்பாளர், தான் நடிகராக அவதாரமெடுத்த சூழலில்,அருகே இருந்த பட நாயகியை, தனது மூன்றாவது ஆசை நாயகி ஆக்கிக்கொண்டாராம்.

2.மாதந்தோறும் காதலிகளை மாற்றி வரும் வம்புத்தம்பி, தற்போது தற்காலிகமாக பாட்டையில் அக்ரம் அண்ணன் பயன்படுத்திய தேக்‌ஷா பாத்திரத்தை பயன்படுத்தி வந்தாலும்,கூடிய விரைவில் தனது பழைய ‘நாயனத்தை கைப்பற்றும் எண்ணத்தில் இருக்கிறாராம். இதற்காக நாயன தார தப்பட்டையுடன் தம்பி தயாராகிக்கொண்டிருப்பதாக தகவல்.

1.ஆனால் இதே நாயனத்துக்கு, பாஸ்’ இயக்குனரின் துணையோடு ,அட இதோ பார்யா நடிகர் பல்லக்குத்தூக்க அலைவதாகவும், அட்லீஸ்ட் பார்ட் டைம் லவ்வர் வேலையாவது தரும்படி நாயனத்தின் சேலையைப்பிடித்து தொங்குவதாக நயவஞ்சக வட்டாரங்கள் நச்சரிக்கின்றன.

1 comment:

  1. கிசுகிசுவா இது...சும்மா.....அனல் பறக்குதே...

    ReplyDelete